×

வாகனம் மோதி முதியவர் சாவு

 

திருவையாறு,பிப்.3: திருவையாறு அருகேயுள்ள அம்மாள் கிராமம் மைதீன்தோப்பை சேர்ந்தவர் இளங்கோவன்(70) இவர் நேற்று காலை கடைத்தெருவிற்கு சென்று வருவதாக வீட்டில் சொல்லிவிட்டு திருவையாறிலிருந்து திருமானூர் செல்லும் மெயின்ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து இளங்கோவன் மனைவி தமிழரசி(60) திருவையாறு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். எஸ்எஸ்ஐ ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் இளங்கோவனின் உடலை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து மோதிய வாகனத்தை தேடி வருகிறார்.

The post வாகனம் மோதி முதியவர் சாவு appeared first on Dinakaran.

Tags : Thiruvaiyaru ,Ilangovan ,Ammal ,Maidinthop ,Thirumanur ,
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா