×

கலெக்டர் ஆய்வு மின்னணு பணபரிவர்த்தனை மூலம் வேளாண் இடுபொருட்கள் பெறலாம் வேளாண் உதவி இயக்குனர் தகவல்

 

அரவக்குறிச்சி. பிப். 3: மின்னணு பணபரிவர்த்தன முறையில் வேளாண் இடுபொருள்கள் விவசாயிகள் பெறலாம். இதுதொடர்பாக அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சரஸ்வதி தெரிவித்துள்ளதாவது: அரவக்குறிச்சி வேளாண் விரிவாக்க மையத்தில் நடப்பு ஆண்டு முதல் வேளாண் இடுபொருட்களுக்கான பணபரிவர்த்தனை மின்னணு பணபரிவர்த்தனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் வேளாண் இடுபொருள்களை வாங்கவரும் விவசாயிகள் இடு பொருளுக்கான தொகையினை ஏ.டி.எம்.கார்டு அல்லது கூகுள்பே மூலமாக செலுத்தி, வேளாண் இடுபொருட்களை விவசாயிகள் பெற்றுச்செல்லலாம் என்றார்.

The post கலெக்டர் ஆய்வு மின்னணு பணபரிவர்த்தனை மூலம் வேளாண் இடுபொருட்கள் பெறலாம் வேளாண் உதவி இயக்குனர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Aravakurichi ,Assistant ,Saraswati ,Aravakurichi Regional Agriculture ,Dinakaran ,
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...