×

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பூஜை நடத்த எதிர்ப்பு: இஸ்லாமியர்கள் கடையடைப்பு போராட்டம்

வாரணாசி: உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, அதனை ஒட்டியுள்ள காசி விஸ்வநாதர் கோயிலின் ஒருபகுதியை இடித்து கட்டப்பட்டதாக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மசூதியில் ஆய்வு நடத்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் இந்து கடவுள்களின் சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஞானவாபி மசூதியின் அடித்தளத்தில் உள்ள பாதாள அறையில் இந்துக்கள் பூஜை செய்யவும், 7 நாட்களில் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவும் மாவட்ட நீதிமன்றம் கடந்த புதன்கிழமை நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவு வௌியான அடுத்த சில மணி நேரங்களிலேயே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் மசூதியின் பாதாள அறை திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்கின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடத்த இஸ்லாமிய அமைப்பு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி டால்மண்டி, நை சதக், நடேசர் மற்றும் அர்டல் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஒருநாள் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பதற்றமான சூழல் நிலவியதால் அண்டை மாநிலங்களில் இருந்து போலீசார் குவிக்கப்பட்டனர். பதற்றமான பகுதிகளில் விரைவு காவல் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் காசி விஸ்வநாதர் கோயிலருகே கூடுதல் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே ஞானவாபி மசூதிக்குள் இந்துக்கள் வழிபாடு நடத்த தடை விதிக்க முடியாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

The post ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பூஜை நடத்த எதிர்ப்பு: இஸ்லாமியர்கள் கடையடைப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Hindus ,Gnanawabi Masjid ,Muslims ,Varanasi ,Gnanavabi Masjid ,Varanasi, Uttar Pradesh ,Kashi Vishwanath Temple ,
× RELATED ஞானவாபி மசூதியின் பாதாள அறையில்...