×

சிலம்ப மாஸ்டரிடம் ₹2 லட்சம் திருட்டு

 

பெரம்பூர், பிப்.3: சென்னை ஓட்டேரி சேமாத்தம்மன் காலனி 4வது தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (21), சிலம்ப மாஸ்டர். இவர், கடந்த 2 நாட்களுக்கு முன், தனது குடும்பத்துடன் மேல்மலையனூர் கோயிலுக்கு சென்று விட்டு இரவு அங்கேயே தங்கினார்.

அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த சுமார் ₹2 லட்சம் திருடுபோனது தெரிந்தது. புகாரின்பேரில், ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

 

The post சிலம்ப மாஸ்டரிடம் ₹2 லட்சம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Silamba Master ,Perambur ,Parameswaran ,4th Street, Otteri Seemathamman Colony, Chennai ,Melmalayanur ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு