×

காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு 2 ஆண் புலிகள் நடமாட்டம்: வனத்துறை செயலாளர் தகவல்

சென்னை: 50 வருடங்களுக்கு பிறகு காவேரி வன விலங்கு சரணாலயத்தில் 2 ஆண் புலிகள் தென்பட்டன என்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்பிரியா சாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: காவேரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்தில் ஓசூர் வனக்கோட்டத்தில் ஜுவாலகிரி காப்புக்காடுகள் சரக பகுதியில் 50 வருடங்களுக்கு பிறகு 2 புலிகள் தென்பட்டது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜுவாலகிரி காப்புக்காடுகள் சரக பகுதியில் 4 முதல் 5 வயதுள்ள மற்றும் 8 முதல் 9 வயதுள்ள 2 ஆண் புலிகளின் புகைப்படங்கள் பதிவாகி உள்ளதாக ஓசூர் வன உயிரினக் காப்பாளர் கார்த்திகாயினி தெரிவித்ததாக தலைமை வன உயிரின காப்பாளர் னிவாஸ் ஆர்.ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஜுவாலகிரி காப்புக் காடுகள் சரக பகுதியில் ஜனவரி 2024ல் பொருத்தப்பட்ட கேமரா பதிவுகள் மூலம் இந்த 2 புலிகளின் புகைப்படங்கள் பதிவாகி உள்ளது தெரிய வருகிறது. ஜுவாலகிரி காப்புக்காடுகள் சரகமானது, சமீபத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட காவேரி தெற்கு வன உயிரின சரணாலயத்தையும் ஒட்டியுள்ள, தொடர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புலிகளின் நடமாட்டம் காணப்படுவது, பன்னார் கட்டா தேசிய பூங்கா மற்றும் அதன் அருகிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் இருந்து புலிகள் இங்கு வசிக்க உகந்த வனப்பகுதியாக மாற தமிழ்நாடு அரசு வன உயிரினங்களை பாதுகாக்க எடுத்து வரும் வெற்றிகரமான நடவடிக்கைகளே காரணம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு 2 ஆண் புலிகள் நடமாட்டம்: வனத்துறை செயலாளர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kaveri Wildlife Sanctuary ,Forest ,CHENNAI ,Cauvery Wildlife Sanctuary ,Environment, ,Change ,Supriya Chagu ,Kaveri North Wildlife Sanctuary ,Forest Department ,Dinakaran ,
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ