×

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

 

நாமக்கல், பிப்.3: நாமக்கல் மாவட்டத்தில் நிலம் அளவீடு செய்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய, சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களுக்கு நேரில் செல்ல தேவையில்லை. நிலத்தை அளவீடு செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் புதிய வசதியை, தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்து உள்ளார்.

இப்புதிய சேவையின் மூலம், பொதுமக்கள் நிலம் அளவை செய்ய எந்த நேரத்திலும் எவ்விடத்தில் இருந்தும் நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த, வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு எஸ்எம்எஸ் அல்லது செல்போன் மூலம் தெரிவிக்கப்படும். மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நில சர்வேயர் கையொப்பமிட்ட அறிக்கை வரைபடம் ஆகியவற்றை, மனுதாரர் இணையதளம் மூலம் ஆன்லைனில் டவுன்லோடு செய்துகொள்ளும் வகையில், சர்வேயர் மூலம் பதிவேற்றம் செய்யப்படும். பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal District ,Collector ,Uma ,Dinakaran ,
× RELATED நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே...