×

சாராயம், மது விற்ற வழக்கில் 83 பேர் கைது

 

அரூர், பிப்.3: அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தா தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அரூர் கோட்டத்தில் கள்ளச்சாராயம், மதுபாட்டில் கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்பனை செய்தவர்கள், ஓட்டல், பொட்டி கடையில் மது குடிக்க அனுமதித்த கடைக்காரர்கள் உள்பட அரூர், பொரப்பூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் ஆகிய பகுதிகளில், கடந்த ஒரு மாதத்தில், 23 பெண்கள் உள்பட 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து, 1606 மது பாட்டில்கள், 15 லிட்டர் கள்ளச்சாராயம், 3 கிலோ கஞ்சா, 5 டூவீலர்கள்ள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

 

The post சாராயம், மது விற்ற வழக்கில் 83 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Arur ,Prohibition ,Enforcement Unit ,Inspector ,Vasantha ,Arur district ,Dinakaran ,
× RELATED டூவீலர்கள் மோதி தொழிலாளி பலி