×

மாதப்பூரில் வருகிற 25-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடக்கிறது

 

திருப்பூர்,பிப்.3: பல்லடம் அருகே மாதப்பூரில் வருகிற 25-ம் தேதி நடைபெற உள்ள மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயண நிறைவு விழா மற்றும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற நடை பயணம் தமிழக முழுவதும் மேற்கொண்டு வருகிறார். இதுவரை பல்வேறு தொகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.இந்நிலையில் என் மண் என் மக்கள் நடைபயண நிறைவு விழா சென்னையில் நடைபெறுவதாக இருந்தது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருந்தார். இதற்கிடையே தற்போது நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் நடைபெற இருக்கிறது. இதற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார். இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரது வருகை குறித்த தேதி உறுதி செய்யப்படாமல் இருந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி கட்டாயம் பங்கேற்பார் எனவும், அவரது வருகையை உறுதி செய்த பின்னர் பொதுக்கூட்டம் மற்றும் நிறைவிழா தேதி அறிவிக்கப்படும் என பா.ஜ. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே மாதப்பூரில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் சீரமைக்கப்பட்டு வருகிறது. விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வருகிற 25-ம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தர இருக்கிறார். தொடர்ந்து மாதப்பூரில் நடைபெறுகிற என் மண் என் மக்கள் நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருக்கிறார். இந்த தகவலை பாஜ நிர்வாகிகள் தெரிவித்தனர். திருப்பூர் மாவட்டத்திற்கு 3-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி வருவதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

The post மாதப்பூரில் வருகிற 25-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Madhapur ,Modi ,Tirupur ,Narendra Modi ,State ,President ,Annamalai ,En Man En People Walk ,Palladam ,Tamil Nadu ,BJP ,PM Modi ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...