×

திண்டுக்கல் மாவட்டத்தில் 15 பிடிஓக்கள் இடமாற்றம்

திண்டுக்கல், பிப். 3: திண்டுக்கல் மாவட்டத்தில் 15 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்து கலெக்டர் பூங்கொடி உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில்தாசில்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் 15 வட்டார வளர்ச்சி அலுவலர்களும் இடமாற்றம் செயல்பட்டுள்ளனர்.

அதன்படி, ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் தட்சணாமூர்த்தி, பழநி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்கு பணிபுரிந்த கண்ணன் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராகவும், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்த சுப்பிரமணி, வடமதுரை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராகவும், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் கலாவதி,

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கும்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்த முருகேசன் வடமதுரை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்த ராஜசேகரன், திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், இங்கு பணிபுரிந்த அண்ணாதுரை குஜிலியம்பாறை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்த கற்பகம், நத்தம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராகவும், இங்கு பணிபுரிந்த சுமதி சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ) பணியிட மாறுதல் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

The post திண்டுக்கல் மாவட்டத்தில் 15 பிடிஓக்கள் இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Dindigul district ,Dindigul ,Collector ,Poongodi ,Development Officers ,Tahsildars ,Dinakaran ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...