×

கட்டிமுடிக்கப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆனது காட்சி பொருளான அங்கன்வாடி மையம்: விரைவில் திறக்க கோரிக்கை

 

ஊத்துக்கோட்டை: பனப்பாக்கம் கிராமத்தில் கட்டிமுடிக்கப்பட்டு காட்சி பொருளாக உள்ள அங்கன்வாடி மையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எல்லாபுரம் ஒன்றியம் பனப்பாக்கம் ஊராட்சியில் சிறுவர் – சிறுமிகள் படிப்பதற்காக அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. நாளடைவில் இந்த மையம் பழுதடைந்து காணப்பட்டதால், புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி கடந்த 2022 – 23ம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ரூ.12 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.  இந்நிலையில் இந்த மையம் கட்டிமுடிக்கப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இ-சேவை மையத்தில் படித்து வருகிறார்கள். எனவே இந்த அங்கன்வாடி மையத்தை விரைவில் திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கட்டிமுடிக்கப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆனது காட்சி பொருளான அங்கன்வாடி மையம்: விரைவில் திறக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Anganwadi Center ,Oothukottai ,Panapakkam ,Panappakkam Panchayat ,Ellapuram Union ,Anganwadi Centre ,Dinakaran ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்