×

மேல்மருவத்தூர் அருகே கோர விபத்து பைக் மீது லோடு வாகனம் மோதி தாய், மகன் பரிதாப பலி

 

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் அருகே பைக் மீது லோடு வாகனம் மோதி தாய், மகன் பலியாகினர். திருவண்ணாமலை மாவட்டம், வெளியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வசந்தா (45), அவரது மகன் கார்த்திக் (25). இருவரும் நேற்று காலை இரு சக்கர வாகனத்தில் வந்தவாசி – சோத்துப்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கம் அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லோடு வாகனம் பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தாய், மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த மேல்மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், விபத்தில் இறந்து வசந்தா, சென்னையில் வீட்டு வேலை செய்து வருவதாகவும், அதற்காக மேல்மருவத்தூரில் இருந்து ரயில் மூலம் சென்னை செல்வதற்காக தனது மகனுடன் சொந்த ஊரிலிருந்து மேல்மருவத்தூர் ரயில் நிலையம் வரும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டு தாய், மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மேல்மருவத்தூர் அருகே கோர விபத்து பைக் மீது லோடு வாகனம் மோதி தாய், மகன் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Melmaruvathur ,Madhurantagam ,Vasantha ,Karthik ,Payyambakkam ,Tiruvannamalai district ,Kora ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...