- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இடைநிலை பட்ஜெட்
- திமுக
- தில்லி
- காந்தி
- சிலை
- சென்னை
- தமிழ்
- தமிழ்நாடு
- யூனியன் அரசு
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
சென்னை: ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் வரும் 8ம் தேதி திமுக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்தும், புயல் மழை நிவாரணம் வழங்காததைக் கண்டித்தும், திமுக எம்பிக்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என்று அறிவித்திருந்தார். இது குறித்து எம்பிக்கள் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். தமிழ்நாடு புறக்கணிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குரல் எழுப்புவார்கள் என்றும் கூறியிருந்தார். அதன்படி இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புயல்மழை நிவாரணம் வழங்காத ஒன்றிய அரசைக் கண்டித்தும் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை எதிரே வரும் 8ம் தேதி திமுக எம்பிக்கள் கருப்பு சின்னம் அணிந்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
The post இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு டெல்லியில் வரும் 8ம் தேதி திமுக எம்.பி.க்கள் போராட்டம்: நாடாளுமன்ற வளாக காந்தி சிலை எதிரே நடக்கிறது appeared first on Dinakaran.