×

பெரியபாளையம் அருகே தரைப்பாலத்தை சீரமைத்து தடுப்புகள் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே புதுப்பாளையம் – காரணி தரைப்பாலத்தை சீரமைத்து தடுப்புகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே மங்களம், புதுப்பாளையம், காரணி, எருக்குவாய் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

இவர்கள் காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்கள் வாங்கவும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் ஆகியோர் புதுப்பாளையம் பகுதியில் ஆரணியாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தின் வழியாக ஆரணிக்கு சென்று, அங்கிருந்து கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கும், பெரியபாளையம் சென்று அங்கிருந்து, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், சென்னை ஆகிய பகுதிகளுக்கும் படிப்பு, வேலை, வியாபாரம் சம்பந்தமாகவும் சென்று வருவார்கள்.

இந்நிலையில் புதுப்பாளையம் – காரணி ஆரணியாற்றில் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தொடர்ந்து கடந்த 4 மாதங்களாக தண்ணீர் செல்வதால் தரைப்பாலம் பாசி படிந்து காணப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்வோர் வழுக்கி விழுந்து காயம் அடைகிறார்கள். மேலும் பாலத்தின் ஓரம் மிக்ஜாம் புயலால் கடுமையாக சேதமடைந்து கிடக்கிறது. இதில் விழுந்தால் உயிர் சேதம் ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது. எனவே விரைவில் தரைப்பாலத்தை சீரமைத்து, தடுப்புகள் அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பெரியபாளையம் அருகே தரைப்பாலத்தை சீரமைத்து தடுப்புகள் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Periyapalayam ,Oothukottai ,Pudupalayam-Fakkar footbridge ,Mangalam ,Pudupalayam ,Phakar ,Erukuwai ,
× RELATED கடல் போல் காட்சியளிக்கும் தாமரைப்பாக்கம் தடுப்பணை: விவசாயிகள் மகிழ்ச்சி