×

திருவேற்காடு எஸ்.ஏ.கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர்: திருவேற்காடு, எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், நேரு யுவ கேந்திராவும் இணைந்து கல்லூரி தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா உத்தரவின் பேரில் சாலைப் பாதுகாப்பு பேரணி நடைபெற்றது. பேரணியில் கல்லூரியின் இளம் வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறையை சேர்ந்த 50 மாணவர்கள் கலந்து கொண்டனர். பேரணியை நேரு யுவ கேந்திரா சங்கம், தேசிய இளைஞர் படைத் தேர்வுக்குழு உறுப்பினர் அஸ்வின் என்கிற ராஜசிம்ம மகேந்திரா தொடங்கி வைத்தார்.

இந்த பேரணி காடுவெட்டி அரசு மருத்துவமனை முதல் எஸ்.ஏ.கல்லூரி வரை நடைபெற்றது. இதில் பூந்தமல்லி போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் சந்திரமௌலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பல்வேறு வகையான சாலை விபத்துகளின் புள்ளிவிவரங்கள் குறித்தும் இந்த விபத்துகளுக்கான காரணங்களையும், பல்வேறு வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கான உதாரணங்களையும் குறிப்பிட்டு பேசினார். பேரணிக்காக தன்னார்வலர்களுக்கு டி-சர்ட்கள், பேட்ஜ்கள் மற்றும் தொப்பிகள் வழங்கப்பட்டன.

The post திருவேற்காடு எஸ்.ஏ.கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : safety awareness ,Tiruvekadu SA College ,Thiruvallur ,SA College of Arts and Science ,Thiruvekadu ,Nehru Yuva Kendra ,P. Venkatesh Raja ,Road Safety Awareness Rally ,Dinakaran ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்