×

திருவான்மியூர் பகுதியில் சாக்லேட் தருவதாக அழைத்துச் சென்று 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்ததில் முக்கிய குற்றவாளி கைது

சென்னை: சென்னை திருவான்மியூர் பகுதியில் சாக்லேட் தருவதாக அழைத்துச் சென்று 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்ததில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். சென்னையில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தநபரை கைது செய்துள்ளனர். சிறுமிகள் வன்கொடுமை தொடர்பாக அடையாறு பகுதியை சேர்ந்த யோவான் ஆண்டவர் என்பவரை கைது செய்துள்ளனர்.

சென்னை நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாபு என்பவர்புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், “என்னுடைய மகள் உட்பட 7 வயது முதல் 10 வயதுடைய மூன்று சிறுமிகள் அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கின்றனர். எனக் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீஸார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சிறுமிகளை அழைத்துச் சென்றது 4ம் வகுப்பு மாணவன் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதனால் அந்த மாணவனிடம் போலீஸார் விசாரணை நடத்தி, சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தவரின் பின்னணி குறித்த தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.

இது குறித்து நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், எங்களிடம் புகாரளித்த பாபுவின் மகள், கடந்த சில தினங்களாக சோர்வுடன் காணப்பட்டிருக்கிறார். அதனால் அவரிடம் பாபுவின் குடும்பத்தினர் விசாரித்தனர். விசாரணையில், `நானும் என்னுடைய தோழிகளும் கடந்த 30ம் தேதி விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது 4ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர், குறிப்பிட்ட அடுக்குமாடிக்கு வந்தால் சாக்லேட் தருவதாகக் கூறி எங்களை அழைத்துச் சென்றார். அதை நம்பி நாங்களும் அங்கு சென்றோம். அப்போது எங்களுக்கு சாக்லேட்களை ஒருவர் கொடுத்தார்.

பின்னர் எங்களை அடுக்குமாடிக் குடியிருப்பின் மொட்டை மாடிக்கு அந்த நபர் அழைத்துச் சென்றார். அங்கு யாருமில்லை. அதனால், எங்களிடம் அந்த நபர் தவறாக நடந்து கொண்டார். அதோடு இந்தச் சம்பவத்தை வெளியில் சொல்லக் கூடாது எனவும் அந்த நபர் மிரட்டினார். அதனால் கடந்த 30ம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தை வெளியில் சொல்லவில்லை. ஆனால் உடல் சோர்வு காரணமாக வீட்டில் சொல்லிவிட்டேன்’ என்று தெரிவித்திருக்கிறார். இதையடுத்து பாபுவின் மகளிடம் நாங்களும் தனியாக விசாரித்தோம். அவர் அளித்த தகவல் மற்றும் அவர் அடையாளம் காட்டிய மாணவனிடம் விசாரணை நடத்தினோம். அப்போது அந்த மாணவன், அந்த மர்ம நபர் குறித்த தகவல்களைத் தெரிவித்தார்.

ஆனால் அந்த மாணவனுக்கு அந்த நபர் குறித்த முழுமையான தகவல்கள் தெரியவில்லை. அதனால் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து, அந்த நபர் குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர். மாணவன் மற்றும் சிறுமிகள் அளித்த தகவலின்படி விசாரித்தபோது அந்த நபர் தலைமறைவாக இருப்பது தெரியவருகிறது. அதனால் அவரைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று சிறுமிகள் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த நபரிடம் விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் 30 வயது அடையாளம் தெரியாத நபர் பல மாதங்களாக சாக்லெட் தருவதாக கூறி 7 முதல் 10 வயது வரை உள்ள 3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் பாலியல் வன்கொடுமை உள்ளாக்கப்பட்ட அந்த மூன்று சிறுமிகளிடம் போலீசார் வீடியோ பதிவு வாக்குமூலம் பெற்று இதனை உறுதி செய்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் அந்த அடையாளம் தெரியாத நபர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இந்நிலையில் இன்று திருவான்மியூர் பகுதியில் சாக்லேட் தருவதாக அழைத்துச் சென்று 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்ததில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். அடையாறு பகுதியை சேர்ந்த யோவான் ஆண்டவர் என்பவரை கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post திருவான்மியூர் பகுதியில் சாக்லேட் தருவதாக அழைத்துச் சென்று 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்ததில் முக்கிய குற்றவாளி கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvanmiur ,Chennai ,
× RELATED தென்சென்னை தொகுதியில்...