×

ஆவடி பேருந்து நிலையத்தில் டிரைவர், கண்டக்டர் மீது சரமாரி தாக்குதல்: சட்டக்கல்லூரி மாணவர் கைது

ஆவடி: ஆவடி பேருந்து நிலையத்தில் நேற்று மாலை கோயம்பேடு செல்லவேண்டிய மாநகர பேருந்து நின்றிருந்தது. இதில் திருமுல்லைவாயலை சேர்ந்த டிரைவர் ஹரிஹரசுப்பிரமணி (57), அம்பத்தூரை சேர்ந்த கண்டக்டர் மணி (52) பணியில் இருந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் கோயம்பேடு பேருந்தை இயக்க டிரைவர், கண்டக்டர் சென்றுள்ளனர். அப்போது இளம்பெண்ணும் வாலிபரும் ஜாலியாக சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை கீழே இறங்கும்படி டிரைவர், கண்டக்டர் கூறியுள்ளனர்.

அப்போது இளம்பெண்ணுடன் ஜாலியாக சிரித்து பேசிக்கொண்டிருந்த அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த தனியார் சட்டக்கல்லூரி மாணவர் கிஷோர்குமார் (19), தங்களை கீழே இறங்க சொன்ன டிரைவர், கண்டக்டரிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமான சட்டக்கல்லூரி மாணவர் கிஷோர்குமார், டிரைவர், கண்டக்டரை சரமாரி தாக்கியுள்ளார்.

டிரைவர் ஹரிஹரசுப்பிரமணி, கண்டக்டர் மணி ஆகிய இருவரும் ரத்தக்காயங்களுடன் மயங்கி விழுந்தனர். தப்பியோட முயற்சித்த சட்டக்கல்லூரி மாணவர் கிஷோர்குமாரை அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடித்தனர். காயமடைந்த டிரைவர், கண்டக்டரை ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் கிஷோர்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

The post ஆவடி பேருந்து நிலையத்தில் டிரைவர், கண்டக்டர் மீது சரமாரி தாக்குதல்: சட்டக்கல்லூரி மாணவர் கைது appeared first on Dinakaran.

Tags : Barrage ,on ,Avadi ,Koyambedu ,Avadi bus station ,Hariharasubramani ,Tirumullaivayal ,Mani ,Ambattur ,Dinakaran ,
× RELATED வீரபாண்டி தடுப்பணையில் குளித்து மகிழ...