×

கருவின் பாலினத்தை சட்டவிரோதமாக கண்டறிந்து வந்த கும்பல் தப்பியோட்டம் : தரகர் கைது

தருமபுரி : தருமபுரியில் கருவின் பாலினத்தை சட்டவிரோதமாக கண்டறிந்து வந்த கும்பல் தப்பி ஓடிய நிலையில் தரகர் கைது செய்யப்பட்டார். தொப்பூர் அருகே தனியாக வீடு எடுத்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இடைத்தரகர் மூலம் கர்ப்பிணிகளுக்கு கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என கண்டறியும் வேலை நடப்பதாக புகார் கூறப்பட்டது. கருவில் இருப்பது பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்வது உள்ளிட்ட செயல்களும் நடந்திருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்தது. தகவலை அடுத்து வீட்டில் சோதனையிட மருத்துவக் குழுவினர் வந்ததை அறிந்ததும் கும்பல் தப்பியோடினர். பணத்துக்காக சட்டவிரோத செயலில் ஈடுபட்டுவந்த இடைத்தரகரை பிடித்த மருத்துவக் குழு, அவரை போலீசில் ஒப்படைத்தது.கர்ப்பிணிகளுக்கு சட்டவிரோதமாக பரிசோதனை செய்து வந்த கும்பலிடம் இருந்து 2 கார்களை பறிமுதல் செய்தது போலீஸ்.

The post கருவின் பாலினத்தை சட்டவிரோதமாக கண்டறிந்து வந்த கும்பல் தப்பியோட்டம் : தரகர் கைது appeared first on Dinakaran.

Tags : Dharampuri ,Dharumpuri ,Toppur ,Dinakaran ,
× RELATED வரலாறு காணாத வெயில்!: நீர்வரத்தின்றி...