×

சொகுசுகாரில் வலம் வந்த கும்பல் கைது: கடலூர் அருகே கர்ப்பிணிகளை தேடிப்பிடித்து கருக்கலைப்பு

கடலூர்: கடலூர் அருகே சொகுசு காரில் சென்று கருக்கலைப்பு செய்த 4 பேரை வேப்பூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நவீன ஸ்கேன் கருவிகள் கருக்கலைப்பு மாத்திரைகள் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடலூர் அருகே கிராமம் கிராமமாக சொகுசு காரில் சென்று கருக்கலைப்பு செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தில் ஓம் சக்தி மருந்தகம் உள்ளது.

இந்த மருந்தகத்தை அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் நடத்தி வருகிறார். இவர் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமம் நகர பகுதிகளிலிருந்து வரும் கர்ப்பிணி பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து வருவதாக வேப்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்று வேப்பூர் போலீசார் கழுதூர் கிராமத்தில் ஓம் சக்தி மருந்தகத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கருக்கலைப்பு செய்வதற்கான மாத்திரைகள், மருந்துகள், ஊசிகள் இருந்துள்ளன.

அப்போது மருந்தகத்திற்கு முன்பு சொகுசு கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. போலீசார் சந்தேகமடைந்து அந்த காரை சோதித்தனர். காருக்குள் கர்ப்பமாக பெண்கள் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிந்து கருக்கலைப்பு செய்வதற்கான ஸ்கேன் கருவி இருந்தது உறுதியானது. இதை அடுத்து மருந்தகத்தில் இருந்த மணிவண்ணன் மற்றும் 3 பேரை வேப்பூர் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது மணிவண்ணனுடன் இருந்தவர்கள் தினேஷ், கண்ணதாசன், கௌதமி என தெரியவந்தது. மணிவண்ணன் தனது மனைவி பெயரில் கழுதூரில் மருந்தகத்தை அமைத்து.

மருந்தகத்தில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்தது ஊதியானது . அதற்கு மற்றவர்கள் துணை போய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் இது குறித்து வேப்பூர் அரசு தலைமை மருத்துவர் அகிலன் கொடுத்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 4 போரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நவீன ஸ்கேன் கருக்கலைப்பு மாத்திரை, மருந்துகள் மற்றும் ஊசிகள் சொகுசுகார் உள்ளிட்டவற்றை போலீசார் பறி முதல் செய்தனர். சொகுசு வாகனத்தில் நவீன ஸ்கேன் கருவியை வைத்து கொsண்டு ஊர் ஊராக சென்று கர்ப்பிணி பெண்களை தேடி பிடித்து கருக்கலைப்பு செய்த கும்பல் பிடிபட்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post சொகுசுகாரில் வலம் வந்த கும்பல் கைது: கடலூர் அருகே கர்ப்பிணிகளை தேடிப்பிடித்து கருக்கலைப்பு appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Veypur police ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...