- குடிநீர் வடிகால் வாரியம்
- சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம்
- சென்னை
- குடிநீர் மற்றும் வடிகாலமைப்பு சபை
- சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம்
- நீர் மற்றும் வடிகாலமைப்பு சபை
- தின மலர்
சென்னை: குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் குடிநீர் வழங்கும் பணியை சென்னை மெட்ரோ பாலிட்டன் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் குடிநீர் வழங்கல் வாரியத்தில் காலியாக உள்ள 1,933 பணியிடங்களுக்கு இன சுழற்சி அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்ப விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் https://tnmaws.ucanapply.com என்ற வலைதளம் வாயிலாக பிப்.9 முதல் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, நேர்காணல் உள்ளிட்ட தேர்வு முறைகள் அனைத்தும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் மார்ச் 12; ஜூன் 29 மற்றும் 30ல் எழுத்துத் தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
The post குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிப்பு..!! appeared first on Dinakaran.