×

சீருடைப்பணியாளர், காவலர் உடற்தகுதி தேர்வர்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு

விருதுநகர், பிப். 2: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய காவலர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று உடற்தகுதித் தேர்வுக்கு செல்வோரை ஊக்கப்படுத்தும் வகையில் ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மைய தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட காவலர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 32 பேருக்கு உடற்தகுதி தேர்விற்கு ஊக்கப்படுத்தும் வகையில் புரதச்சத்து நிறைந்த ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பை கலெக்டர் வழங்கினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post சீருடைப்பணியாளர், காவலர் உடற்தகுதி தேர்வர்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Collector ,Jayaseelan ,Tamilnadu Constable Examination Board ,
× RELATED காரியாபட்டி கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டம்