×

போடியில் 100 கிலோ காட்டுமாடு இறைச்சி பறிமுதல்: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை

 

போடி, பிப். 2: போடி டி.வி.கே.கே நகர் சூர்யா (22) ஆகாஷ் (19), உத்தமபாளையம் ஜோசப், பொட்டிபுரம் புலிப்பாண்டி, போடி அருகே பூதிப்புரம் ராஜ்குமார், போடி புதூர் சீனிவாசன் ஆகிய 6 பேரும் நேற்று முன்தினம் இரவு போடி அருகே உள்ள வனப்பகுதியி ல் காட்டுமாட்டை வேட்டையாடியுள்ளனர்.
அதன்பின் 100 கிலோ காட்டுமாடு இறைச்சியை சூர்யா வீட்டில் வைத்துள்ளனர். தகவலறிந்து வந்த போடி வனத்துறையினர் சூர்யா வீட்டில் ஆய்வு செய்தனர்.

வனத்துறையினரை கண்டதும் 4 பேர் தப்பியோட சூர்யா, ஆகாஷ் ஆகிய இருவரும் பிடிபட்டனர். வனத்துறையினர் காட்டு மாட்டு இறைச்சி மற்றும் வேட்டைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். சூர்யா, ஆகாஷ் இருவரையும் வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து போடி வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய் து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 4 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post போடியில் 100 கிலோ காட்டுமாடு இறைச்சி பறிமுதல்: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Bodi ,DVKK ,Nagar Surya ,Akash ,Uttampalayam ,Joseph ,Potipuram ,Pulipandi ,Podhipuram Rajkumar ,Puthur ,Srinivasan ,
× RELATED போடி ராசிங்காபுரத்தில் மலைபோல் மண் குவிப்பால் மக்கள் சிரமம்