×

100க்கும் மேற்பட்டோர் கைது உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் துறையூர் நகரில் கலெக்டர் ஆய்வு

 

துறையூர், பிப்.2: துறையூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நேற்று மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்தார்.‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் திருச்சி மாவட்ட கலெக்டர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள கண்ணனூரில் நேற்றுமுன்தினம் பள்ளிகள், சத்துணவு கூடங்கள் உள்பட பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நேற்றுமுன்தினம் இரவு பகுதியில் தங்கியிருந்த கலெக்டர் நேற்று (1ம்தேதி) காலை துறையூர் நகராட்சிகுட்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நீரேற்று நிலையம், குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் புதிதாக கட்டப்படும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, காய்கறி சந்தை, ஒழுங்குமுறை விற்பனை கூடம், உழவர் சந்தை ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தார்.

இதனையடுத்து துறையூர் ஊராட்சி ஒன்றியம், க.கொத்தம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுகளை ஆய்வு செய்தார். பின்னர் மாணவ, மாணவியர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார். அவருடன் துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின்குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் தர்மன் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் அருகில் அமர்ந்து உணவு சாப்பிட்டனர். ஆய்வின்போது நகர்மன்றத் தலைவர் செல்வராணி, துணைத் தலைவர் முரளி, துறையூர் ஒன்றியக்குழுத் தலைவர் சரண்யா மோகன்தாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் சென்றனர்.

The post 100க்கும் மேற்பட்டோர் கைது உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் துறையூர் நகரில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Dhariyaur ,Dharayur ,District Collector ,Pradeep Kumar ,Trichy District ,Kannanur ,Dinakaran ,
× RELATED பச்சைமலை புதூர் அருகே ரூ.33.50 லட்சம்...