சிவகங்கை, பிப். 2: கோழிக்கழிச்சல் தடுப்பூசி போட இருவார சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கால்நடை பராமரிப்புத்துறையினரால் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. வரும் பிப். 14ம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு இம்முகாம் நடைபெற உள்ளது.
மாவட்டத்தில் அமைந்துள்ள 2 கால்நடை மருத்துவமனை, 79 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 47 கால்நடை கிளை நிலையங்கள் ஆகியவைகளில் கோழி கழிச்சல் தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே புறக்கடை கோழிகள் கழிச்சால் நோயால் பாதிக்கப்படாமல் இருக்க சிறப்பு முகாம்களின் வாயிலாக பொதுமக்கள் கோழிகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கோழிகளுக்கு இலவச தடுப்பூசி appeared first on Dinakaran.