×

நாகர்கோவிலில் ரூ.47 லட்சம் செலவில் சாலைப்பணி: மேயர் தொடங்கி வைத்தார்

 

நாகர்கோவில், பிப். 2: நாகர்கோவில் மாநகராட்சி 33வது வார்டுக்குட்பட்ட தொல்லவிளை அய்யா கோயில் முன்புறம் அலங்கார தரை கற்கள் பதித்தல் மற்றும் காங்கிரீட் சாலைகள் சீரமைப்பு பணி நேற்று ரூ.7.50 லட்சம் செலவில் நடந்தது. இந்த பணியை மேயர் மகேஷ் தொடங்கிவைத்தார். இதுபோல் மேலசூரங்குடி சானல்கரை பகுதியில் ரூ.32 லட்சம் செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணி, 22வது வார்டுக்குட்பட்ட ஏசுவடியான் தெருவில் ரூ.7.50 லட்சம் செலவில தார் சாலை அமைக்கும் பணி ஆகிய பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் மேரிபிரின்சி லதா, மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சிலர் பால்தேவராஜ், சுகாதார அலுவலர்கள் மாதவன்பிள்ளை, முருகன், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ், திமுக மாநகர செயலாளர் ஆனந்த், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், பகுதி செயலாளர்கள் ஜீவா, ஷேக்மீரான், மற்றும் நிர்வாகிகள் தொல்லவிளை குமார், வட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், சந்திரராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post நாகர்கோவிலில் ரூ.47 லட்சம் செலவில் சாலைப்பணி: மேயர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Mayor ,Thollavilai Ayya Temple ,Ward ,Nagercoil Municipal Corporation ,Mahesh ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...