×

மாநகராட்சி மண்டலங்களில் நமக்கு நாமே திட்டத்தில் 30 கழிவறை கட்ட திட்டம்

மதுரை, பிப்.2: மதுரை மாநகராட்சி ஐந்து மண்டலங்களிலும் பல்வேறு சுகாதாரப்பணிகள் நாள்தோறும் திடக்கழிவு மேலாண்மை பணிகள், சாலையோரம் தேங்கியுள்ள மணல் அகற்றுதல், வீடு வீடாக மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை சேகரித்தல் பணி உள்ளிட்ட பல்வேறு களப்பணிகள் தூய்மை பணியாளர்கள் மூலம் நடந்து வருகிறது. தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை நிவர்த்தி செய்யும் விதமாக தூய்மை பணியாளர்களுக்கு கழிப்பறை வசதிகள் ஏற்படுத்திட மாநகராட்சியின் சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 30 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு புதிய கழிப்பறைகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக மண்டலம் 2 வார்டு 32 அவுட் போஸ்ட் பாரதியார் பூங்காவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறையை மேயர் இந்திராணிபொன்வசந்த், கமிஷனர் மதுபாலன் ஆகியோர் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். தேர்வு செய்யப்பட்டுள்ள 30 இடங்களில் புதிய கழிப்பறைகள் கட்டப்படுவதால் தூய்மை பணியாளர்கள் இடர்பாடுகளின்றி சிறப்பாக பணியாற்ற முடியும்.

இந்நிகழ்வில் துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி, தலைமை பொறியாளர் ரூபன்சுரேஷ், கண்காணிப்பு பொறியாளர் அரசு, உதவி ஆணையாளர் அருணாச்சலம், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் பூபதி, உதவி செயற்பொறியாளர் காமராஜ், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், கவுன்சிலர் விஜயமௌசுமி உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post மாநகராட்சி மண்டலங்களில் நமக்கு நாமே திட்டத்தில் 30 கழிவறை கட்ட திட்டம் appeared first on Dinakaran.

Tags : Namanam ,Madurai ,Madurai Corporation ,Dinakaran ,
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...