×

பெரியபாளையம் அருகே மூடி கிடக்கும் சுகாதார வளாகம்: பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

 

ஊத்துக்கோட்டை, பிப். 2: பெரியபாளையம் அருகே பாகல்மேடு கிராமத்தில் மூடியே கிடக்கும் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் பாகல்மேடு கிராமத்தில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த 2012 – 13ம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார வளாகம் அப்போதைய எம்பி வேணுகோபால் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.

இந்த சுகாதார வளாகத்தில் தற்போது தண்ணீர் வசதி இல்லாததால், பயன்பாடில்லாமல் மூடியே கிடக்கிறது. இதனால் சுகாதார வளாகத்தின் உள்ளே செடி கொடிகள் முளைத்து புதர்கள் மண்டி காணப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பெரியபாளையம் பிடிஒ அலுவலகத்தில் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பெரியபாளையம் அருகே மூடி கிடக்கும் சுகாதார வளாகம்: பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Periyapalayam ,Uthukottai ,Bagalmedu ,Ellapuram ,
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...