×

தனி இடத்தில் போலீசார் விசாரணை ஆவுடையார்கோவில் வெள்ளாற்றில் மணல் கடத்தியவர் கைது

 

அறந்தாங்கி,பிப்.2: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் சட்டவிரோதமாக மணல் அள்ளியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். ஆவுடையார்கோவில் இன்ஸ்பெக்டர் முத்துசாமி நேற்று வெள்ளாற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டார்.

அப்போது, திருட்டுதனமாக வெள்ளாற்றில் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து டிப்பர் லாரியை ஓட்டி வந்த காரைக்குடியை சேர்ந்த கணேசன் (47) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து கணேசனை அறந்தாங்கி கிளை சிறையில் அடைத்தனர்.

 

The post தனி இடத்தில் போலீசார் விசாரணை ஆவுடையார்கோவில் வெள்ளாற்றில் மணல் கடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Vellaar ,Auduyarko ,Aranthangi ,Pudukottai district ,Auduayarkovil ,Inspector ,Muthusamy ,Vellaru ,
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு