×

சீர்காழி ஜிஹெச்சில் நள்ளிரவில் கலெக்டர் ஆய்வு கூடுதல் டாக்டர் நியமிக்க நடவடிக்கை மேட்டூரில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

 

நாகப்பட்டினம்,பிப்.2: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருமருகலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய தலைவர் மாசிலாமணி, ஒன்றிய செயலாளர் தங்கையன், ஒன்றிய பொருளாளர் வீரமோகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ், விவசாய சங்க ஒன்றிய துணை செயலாளர் மகேந்திரன் ஆகியோர் பேசினார். கருகும் சம்பா பயிரை பாதுகாத்திட மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக வரும் 15ம் தேதி வரை தண்ணீரை திறந்து விட வேண்டும், உளுந்து பயிறுக்கு காப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

The post சீர்காழி ஜிஹெச்சில் நள்ளிரவில் கலெக்டர் ஆய்வு கூடுதல் டாக்டர் நியமிக்க நடவடிக்கை மேட்டூரில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Sirkazhi GH ,Mettur ,Nagapattinam ,Tirumarukal ,Tamil Nadu Farmers' Association ,Masilamani ,Union ,President of Agriculture Union ,Union Secretary ,Thangaiyan ,Union Treasurer ,Weeramohan ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அருகே பரிதாபம்: மரத்தில் கார் மோதியதில் மகன், பெண் அதிகாரி பலி