×

15 பேருக்கு மரண தண்டனை வழங்கிய பெண் நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த பாஜ பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவராக இருந்த ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கடந்த 2021 ம் ஆண்டு வீடு புகுந்து மனைவி, தாய், மகள் கண்ணெதிரே கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக பாப்புலர் பிரன்ட் மற்றும் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த மாவேலிக்கரை மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம், 15 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பளித்த நீதிபதி ஸ்ரீதேவிக்கு சமூக வலைதளங்கள் மூலம் கொலை மிரட்டல்கள் வந்தன. இதைத் தொடர்ந்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீது ஆலப்புழா தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் நசீர்மோன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

The post 15 பேருக்கு மரண தண்டனை வழங்கிய பெண் நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Ranjith Srinivasan ,Backward People's Unit ,Alappuzha, Kerala ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!