- சிஆர்பிஎஃப்
- நக்சல்
- குடியாதம்
- தெகல்குடம் கிராமம்
- பிஜப்பூர் மாவட்டம், சத்தீஸ்கர்
- நக்சலைட்டுகள்
- கே.மோட்டூர்
- குடியாட்டம், வேலூர் மாவட்டம்
- தின மலர்
குடியாத்தம்: சட்டீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டம், தெகல்குடம் கிராமத்தில் நக்சல் தேடுதல் வேட்டையில் சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது, நக்சல்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இதில், வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கே.மோட்டூர் கிராமத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் தேவன் என்பவரும் பலியானார்.
இதையடுத்து, இறந்த வீரரின் உடலானது விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து வேன் மூலம் சொந்த ஊரான கே.மோட்டூர் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர் தேவன் உடலுக்கு கலெக்டர் சுப்புலட்சுமி, எஸ்பி மணிவண்ணன், எம்எல்ஏ அமுலு விஜயன் உட்பட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், ராணுவ மரியாதையுடன் குண்டுகள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
The post நக்சல் தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் வீரர் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் appeared first on Dinakaran.