×

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் 6 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும்: ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் பேட்டி

சென்னை: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் 6 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மாநில அரசுடன் ரயில்வே இணைந்து கிளாம்பாக்கம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. புதிய முனையமாக வில்லிவாக்கம் ரயில் நிலையம் தரம் உயர்த்தப்பட உள்ளது. விரிவான திட்ட அறிக்கை முடிக்கப்பட்டு அடுத்த 3 மாதங்களில் நிதி ஒதுக்கி கட்டுமானம் தொடங்கும். சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்திற்கு அடுத்ததாக வில்லிவாக்கம் முனையம் உருவாக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

The post கிளாம்பாக்கம் ரயில் நிலையம் 6 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும்: ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Clambakkam railway station ,Railway General Manager ,RN Singh ,CHENNAI ,General Manager ,Railways ,Klambakkam railway station ,Clambakkam ,Villivakkam railway ,station ,Dinakaran ,
× RELATED சிறப்பு ரயில் இயக்க வேண்டும்: எம்.பி கோரிக்கை