×

வீட்டின் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: வீட்டின் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார். ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் மின் வசதி ஏற்படுத்தித் தரப்படும். சோலார் மின் வசதி ஏற்படுத்தி உற்பத்தி செய்யும் வீடுகளுக்கு முதல் 300 யூனிட்டுகள் இலவசமாக வழங்கப்படும். விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

The post வீட்டின் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Finance Minister ,Nirmala Sitharaman ,Delhi ,Parliament ,Interim Budget ,Dinakaran ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...