- நிதி அமைச்சர்
- நிர்மலா சீதாராமன்
- பிரக்ன நந்தா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தில்லி
- மேக்னஸ் கார்ல்சன்
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
டெல்லி: தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்துள்ளார். மேக்னஸ் கால்சனுக்கு எதிராக தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என பாராட்டினார். விளையாட்டுத்துறையில் இளைஞர்கள் புதிய உயரங்களுக்குச் செல்வதைக் கண்டு நாடு பெருமை கொள்கிறது. 2010-ல் 20-ஆக இருந்த செஸ் கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை தற்போது 80-ஆக உயர்ந்துள்ளது. மக்களின் வாழ்க்கை சிறப்பாக இருப்பதோடு, அவர்கள் சம்பாதிப்பதும் சிறப்பாகி உள்ளது. ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே வரி போன்றவற்றிற்கு சரக்கு மற்றும் சேவை வரி உதவியாக அமைந்துள்ளது எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில் குறிப்பிட்டார்.
The post தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு.!! appeared first on Dinakaran.