×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.47,040க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. சென்னையில் 2024ஆம் ஆண்டு தொடங்கியது முதல் ஜனவரி மாதத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை 46,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு, கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ . 80 குறைந்தது.

இதன்மூலம் ஒரு கிராம் ரூ. 5,850க்கு விற்பனையானது. அதேபோல் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.46,800க்கு விற்பனையானது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.5,880க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.47,040க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் குறைந்து ரூ.77.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.47,040க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mundinam Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!