×

பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் வீட்டு பணிப்பெண் தீக்குளிக்க முயற்சி..!!

சென்னை: பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் வீட்டு பணிப்பெண் கிருஷ்ணகுமாரி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். தீனதயாளன் வீட்டில் 36 வருடங்களாக பணிப் பெண்ணாக பணியாற்றி வந்தார் கிருஷ்ணகுமாரி. தீனதயாளன் இறந்த பிறகு அவரது மகள் அபர்ணா வீட்டை நிர்வகித்து வந்தார். சென்னையில் உள்ள வீட்டை விற்றுவிட்டு வேறு, இடத்திற்கு செல்வதற்கான ஏற்பாடுகளை அபர்ணா செய்து வந்தார். 36 ஆண்டுகளாக தங்கள் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த கிருஷ்ணகுமாரிக்கு ரூ.5 லட்சம் காசோலை கொடுத்துள்ளார். கூடுதலாக பணம் தர வேண்டும் இல்லையேல் தீக்குளித்து விடுவேன் என கூறி மண்ணெண்ணெய் ஊற்றி கிருஷ்ணகுமாரி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

The post பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் வீட்டு பணிப்பெண் தீக்குளிக்க முயற்சி..!! appeared first on Dinakaran.

Tags : Deenadayalan ,CHENNAI ,Krishnakumari ,Aparna ,
× RELATED சென்னையில் போதை ஊசி செலுத்திக் கொண்டவர் உயிரிழப்பு..!!