×

IRCTC இணையதளம் மூலம் ஆன்லைனில் ரூ.1.8 லட்சம் மோசடி

சென்னை: IRCTC இணையதளம் மூலம் ஆன்லைனில் ரூ.1.8 லட்சம் மோசடி நடைபெற்று இருப்பதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வடபழனியை சேர்ந்த ஸ்ரீதரன் (51) என்பவர் புகார் அளித்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். நாகர்கோயில் செல்லவிருந்த பயணத்தை IRCTC இணையதளத்தில் ஸ்ரீதரன் ரத்து செய்துள்ளார். இணையதளத்தில் For Help-ல் இருந்த 9832603458 என்ற எண்ணில் தனது பணத்தை மீண்டும் அனுப்ப ஸ்ரீதரன் கூறியுள்ளார். எதிர்முனையில் பேசியவரிடம் ஏடிஎம் கார்டு விவரங்களை ஸ்ரீதரன் கூறிய நிலையில் வங்கி கணக்கிலிருந்து ரூ.1.8 லட்சம் மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. விசாரணையில் IRCTC இணையதளத்தில் இருந்த மொபைல் எண்ணை ரயில்வே நிர்வாகம் பதிவிடவில்லை என தெரியவந்தது. இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா? என்பது குறித்து வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post IRCTC இணையதளம் மூலம் ஆன்லைனில் ரூ.1.8 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : IRCTC ,CHENNAI ,Sridharan ,Vadapalani, Chennai ,Nagercoil ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...