×

திருப்பத்தூர் கோர்ட்டில் சாட்சி கூண்டில் நின்ற முதியவர் மயங்கி சாவு

திருப்பத்தூர்: சேலம் வேப்பூர் ேராடு பகுதியை சேர்ந்தவர் நீலமோகன்(60). திருப்பத்தூர் அடுத்த திமனாமுத்தூர் கிராமத்தில் உள்ள இவரது நிலம் தொடர்பான வழக்கு சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சாட்சி சொல்ல நீலமோகன் நேற்று திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சார்பு நீதிமன்றத்திற்கு வந்தார். அப்போது வழக்கு சம்பந்தமாக வழக்கறிஞர்கள் வாதாடும் போது திடீரென சாட்சி கூண்டில் இருந்தபடி நீலமோகன் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். நீலமோகன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பது தெரிய வந்துள்ளது.

The post திருப்பத்தூர் கோர்ட்டில் சாட்சி கூண்டில் நின்ற முதியவர் மயங்கி சாவு appeared first on Dinakaran.

Tags : Tirupattur Court ,Tirupattur ,Neelamohan ,Salem Veypur Yeradu ,Thimanamuthur ,Tirupathur ,Combined Court ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்...