×

மெடிக்கல் கடையில் தொடர் கருக்கலைப்பு: 4 பேர் கைது

வேப்பூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் மணிவண்ணன் (34). இவர், தனது மனைவி சினேகாவை உரிமையாளராக கொண்டு கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கழுதூர் கிராமத்தில் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கான உரிமம் அசகளத்தூரை சேர்ந்த மருந்தாளுநர் கவுதமி (29) என்பவரது பெயரில் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மெடிக்கலில் சட்ட விரோதமாக கருகலைப்பு செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் வேப்பூர் போலீசார் மதியம் 12.30 மணியளவில் அங்கு அதிரடி சொதனை நடத்தினர். பின்னர் போலீசார் மெடிக்கல் முழுவதையும் சோதனை செய்ததில் மணிவண்ணன், மருந்தாளுநர் கவுதமி ஆகிய இருவரும் இணைந்து தொடர் கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது. மெடிக்கலில் வைத்திருந்த கருக்கலைப்பு மாத்திரைகள், அதற்கு பயன்படுத்திய உபகரணங்கள், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறியும் ஸ்கேன் கருவி உள்ளிட்டவற்றை கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மணிவண்ணன், கௌதமி, புரோக்கர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்த கண்ணதாசன்(29), தினேஷ்(22) ஆகியோரைகைது செய்தனர்.

The post மெடிக்கல் கடையில் தொடர் கருக்கலைப்பு: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Veypur ,Manivannan ,Ramalingam ,Asakalathur ,Kallakurichi district ,Kalgadur ,Cuddalore district ,Sneha ,Asakalathurai… ,Dinakaran ,
× RELATED பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி...