×

கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடை போலீஸ் ஸ்டேஷனில் புதிய இன்ஸ்பெக்டராக செந்தில்குமார் பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடை போலீஸ் ஸ்டேஷனில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றார்.நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ளதையடுத்து, ஒரே போலீஸ் ஸ்டேஷனில், மாவட்டத்தில் 2 ஆண்டுகளாக பணிபுரிந்த இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

அதன்படி மகாராஜகடை இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சம்பூர்ணம், ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து மகாராஜகடை புதிய இன்ஸ்பெக்டராக செந்தில்குமார் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.

கடந்த 2000ம் ஆண்டு பழனியில் எஸ்.ஐ.,யாக பணியை துவங்கிய இவர் ஊட்டி, நாமக்கல், ஈரோடு, சேலம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றியுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு பதவி உயர்வு பெற்ற இவர், திருநெல்வேலி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றினார்.

அதன்பின் ஆற்காட்டிலும், தர்மபுரி எஸ்.பி., இன்ஸ்பெக்டராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது கம்பைநல்லூரில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய இவர், மகாராஜகடை புதிய போலீஸ் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு எஸ்.ஐ.க்கள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

The post கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடை போலீஸ் ஸ்டேஷனில் புதிய இன்ஸ்பெக்டராக செந்தில்குமார் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Senthil Kumar ,Maharajagadi police ,station ,Krishnagiri ,Maharajagadi police station ,Sampurnam ,Atur ,Maharajagada ,Sentil Kumar ,
× RELATED ஈரோடு நேதாஜி சாலையில் புதுப்...