×

Paytm நிறுவனம் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வந்ததால் அதன் செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவு..!!

டெல்லி: Paytm நிறுவனம் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வந்ததால் அதன் செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இனி புதிய வாடிக்கையாளர்கள் யாரையும் சேர்க்கக் கூடாது என்றும் டெபாசிட் மற்றும் டாப்-அப் பணம் பெறுவதோ? கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடம் இருந்து வாலட்களில் பணம் பெறுவதோ, ஃபாஸ்ட்டேக், என்.சி.எம்.சி. கார்டு மூலம் பணம் பெறுவதோ கூடாது என Paytm-க்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வாடிக்கையாளர்கள் தமது சேமிப்பு வங்கிக் கணக்கு, நடப்பு கணக்கு, ஃபாஸ்ட்டேக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க தடை விதிக்கக் கூடாது எனவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

The post Paytm நிறுவனம் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வந்ததால் அதன் செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : RBI ,Paytm ,Delhi ,Reserve Bank of India ,Dinakaran ,
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!