×

சர்ச்சைப் பேச்சு விவகாரம்: நடிகர் மன்சூர் அலிகானுக்கு விதித்த ரூ.1 லட்சம் அபராதத்துக்கு தடைவிதிக்க ஐகோர்ட் மறுப்பு..!!

சென்னை: நடிகர் மன்சூர் அலிகானுக்கு விதித்த அபராதத்துக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் திரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் தன் பேசிய முழு வீடியோவை பார்க்காமல் தனது நற்பெயருக்கு கலங்கம் கற்பித்தாக குற்றச்சாட்டி நடிகை திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவிக்கு எதிராக தலா ரூ.1 கோடி மான நஷ்ட வழக்கு தொடர அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார்; நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காக இந்த வழக்கு தொடர்பட்டதாக கூறி நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இந்த அபராத தொகையை இரண்டு வாரத்திற்குள் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் செலுத்தி, அது குறித்த தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அபராத தொகையை தனி நீதிபதி முன்பு ஒப்புக்கொண்டு கால அவகாசம் பெற்றுவிட்ட பின் எப்படி மேல்முறையீடு வழக்கு தொடர முடியும் என கேள்வி எழுப்பினார்கள். தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கவும் மறுப்பு தெரிவித்துவிட்டனர். இந்த உத்தரவை திரும்ப பெற கோரி தனி நீதிபதி முன் வலியுறுத்தலாம் என்று கூறி வழக்கு விசாரணை பிப்ரவரி 7ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

The post சர்ச்சைப் பேச்சு விவகாரம்: நடிகர் மன்சூர் அலிகானுக்கு விதித்த ரூ.1 லட்சம் அபராதத்துக்கு தடைவிதிக்க ஐகோர்ட் மறுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : ICourt ,Mansoor Ali Khan ,Chennai ,Chennai High Court ,Trisha ,Dinakaran ,
× RELATED வேலூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டி...