×

பொதுமக்கள் வலியுறுத்தல் பாட்டில் வெடித்து சிதறியதில் படுகாயம் தஞ்சாவூரில் முதியவர் உயிரிழப்பு

வல்லம்: தஞ்சாவூர்மாதாகோட்டை வங்கி ஊழியர் காலனி 9வது தெருவை சேர்ந்த துரைமாணிக்கம் (60). இவர் கடந்த 12ம்தேதி போகி பண்டிகையை முன்னிட்டு, பழைய பொருள்களை வீடு அருகே போட்டு எரித்துக்கொண்டிருந்தார். அப்போது, அதிலிருந்த மருந்து பாட்டில் வெடித்து சிதறி, துரைமாணிக்கம் மீது விழுந்தது.படுகாயமடைந்த துரைமாணிக்கம் தஞ்சாவூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த துரைமாணிக்கம் நேற்று முன்தினம் இறந்தார்.இதுகுறித்து தமிழ் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

The post பொதுமக்கள் வலியுறுத்தல் பாட்டில் வெடித்து சிதறியதில் படுகாயம் தஞ்சாவூரில் முதியவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Duraimanikam ,9th Street, ,Thanjavurmatakottai ,Bank Employees Colony ,Bogi festival ,12th ,Duraimanikkam ,Patukayam Thanjavur ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...