×

ராசா மிராசுதார் மருத்துவமனை வளாகத்தில் குவிந்து கிடக்கும் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் உள்ள கேண்டீனில் இருந்து கொட்டப்படும் கழிவு பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் பயன்பாட்டிற்காக கேண்டீன் செயல்பட்டு வருகிறது. இந்த கேண்டினில் இருந்து சாம்பார் பை, தண்ணீர் பாட்டில், கேரி பை, மிஞ்சி போன உணவுகள், போன்ற கடை ஊழியர்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ளே கொட்டுவதால் அங்கு துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அங்கு பணிபுரியும் துப்புரவு பணியாளர்களிடம் கேட்டபோது நாங்கள் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட வேஸ்ட் குளுக்கோஸ் பாட்டில் மட்டுமே அங்கு கொட்டி பின் அவற்றை வாகனத்தில் ஏற்றி விட்டு வந்தோம்.

The post ராசா மிராசுதார் மருத்துவமனை வளாகத்தில் குவிந்து கிடக்கும் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Rasa Mirasudar Hospital ,Thanjavur ,Thanjavur Rasa Mirasudar Hospital ,Government Rasa Mirasudar Hospital Complex ,Rasa Mirasudar Hospital Complex ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...