×

நம்பர் பிளேட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து

 

சென்னை, ஜன.31: திருவல்லிக்கேணி எல்லீஸ் சாலையில் சங்கர் என்பவர், கடந்த 15 ஆண்டுகளாக வாகனங்களுக்கு நம்பர் பிளேட் மற்றும் ஸ்டிக்கர் தயாரிக்கும் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் இருந்து நேற்று காலை திடீரென கரும்புகை வெளியேறியது. இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். அதன்படி திருவல்லிக்கேணி மற்றும் எழும்பூரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

அதற்குள் கடை முழுவதும் தீ மளமளவென பரவியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு அரைமணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். நல்வாய்ப்பாக கடையில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள இயந்திரங்கள் மற்றும் கணினிகள் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

The post நம்பர் பிளேட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Shankar ,Ellies Road, Tiruvallikeni ,Dinakaran ,
× RELATED சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்து...