×

காஞ்சிபுரம் அருகே இளம்பெண் மாயம்

 

காஞ்சிபுரம், ஜன.31: காஞ்சிபுரம் அருகே மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரத்தை அடுத்த கோளிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். கூலி வேலை செய்து வருகிறார். இவரின் மகள் பிரபாவதி (20). பள்ளிப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 26ம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியில் சென்றுவருவதாக கூறிவிட்டு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து குடும்பத்தினர், உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் நேற்று போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார், மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

The post காஞ்சிபுரம் அருகே இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Muthukrishnan ,Kolivakkam village ,Coolie ,Prabhavathy ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...