×

மனைவியுடன் தகராறு விஷம் குடித்து தச்சு தொழிலாளி தற்கொலை

கரூர்: மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கார்பெண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் சுங்ககேட் பகுதியை சேர்ந்தவர் சேகர்(50). கார்பெண்டராக பணியாற்றி வந்தார். குடிப்பழக்கம் உள்ள இவருக்கும், இவரின் மனைவிக்கும் இதன் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த மனநிலையில் இருநது வந்த சேகர், கடந்த 27ம்தேதி அன்று வீட்டில யாருமில்ல்£த சமயத்தில் எலி பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கினார். ஆபத்தான நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் புகாரின் பேரில், தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post மனைவியுடன் தகராறு விஷம் குடித்து தச்சு தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Carpenter ,Karur ,Shekhar ,Sungaket ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...