×

களக்காடு அருகே இரு கன்றுகள் ஈன்ற பசு

களக்காடு: களக்காடு அருகே இரு கன்றுகள் ஈன்ற பசுவை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். களக்காடு அண்ணாசாலையை சேர்ந்தவர் தமிழ்செல்வன். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவரான இவர் களக்காட்டில் செயிண்ட் ஜோசப் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். யூனியன் கவுன்சிலராகவும் உள்ளார். இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் களக்காடு சிதம்பரபுரம் மலையடிவாரத்தில் உள்ள அகலிகை சாபம் தீர்த்த ஐயன் சாஸ்தா கோயில் செல்லும் சாலையில் உள்ளது. இங்கு அவர் ஏராளமான நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறார். இதில் ஒரு பசு நேற்று ஒரே நேரத்தில் இரு கன்றுகளை ஈன்றது. இரண்டும் கிடாரி (பசு) கன்றுகள் ஆகும். இதையறிந்த அக்கம், பக்கத்து கிராம மக்கள் இரு கன்றுகளையும், பசுவையும் வியப்புடன் பார்த்து சென்றனர்.

The post களக்காடு அருகே இரு கன்றுகள் ஈன்ற பசு appeared first on Dinakaran.

Tags : Kalakadu ,Tamilselvan ,Kalakkadu Annasalai ,Congress ,St. Joseph's Educational Institutions ,Kalakkad ,Kalakkadu ,
× RELATED களக்காடு மலையில் நீரோடைகள் வறண்டு...