லக்னோ: வருகிற மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை சமாஜ்வாடி கட்சி நேற்று அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்களின் முதல் பட்டியலை சமாஜ்வாடி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அகிலேஷ் யாதவின் மனைவியும், தற்போதைய எம்பியுமான டிம்பிள் யாதவ் உட்பட 16 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
டிம்பிள் யாதவ் மீண்டும் மெயின்புரி தொகுதியில் போட்டியிடுகிறார். எம்பி ஷபிக்குர் ரஹ்மான் பார்க் சம்பால் தொகுதியிலும், லக்னோ எம்எல்ஏ ரவிதாஸ் மெக்ரோதா லக்னோ மக்களவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவின் மகன் அக்ஷய் யாதவ் பிரோசாபாத் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
The post மக்களவை தேர்தல் சமாஜ்வாடி கட்சியின் முதல் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.