×

சட்டீஸ்கரில் நக்சல் தாக்குதலில் 3 சிஆர்பிஎப் வீரர்கள் பலி: 14 வீரர்கள் படுகாயம்

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 3 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானார்கள். 14 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். சட்டீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் தெகல்குடம் கிராமம் பகுதியில் நக்சல் தேடுதல் வேட்டையில் சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபட்டனர். சட்டீஸ்கரில் பிஜப்பூர் மற்றும் சுக்மா மாவட்டங்கள் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் அங்கு நக்சல் ஆதிக்கம் அதிகம் என்பதால் நக்சல் தேடும் தளம் அமைக்கும் பணியும் நடந்து வந்தது.

அந்த இடத்திற்கு நேற்று பகல் 1 மணி அளவில் திடீரென வந்த நக்சல்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 3 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானார்கள். 14 பேர் படுகாயம் அடைந்தனர். இருப்பினும் மற்ற வீரர்கள் நக்சல்களை திருப்பி தாக்கினர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களை சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டன.

The post சட்டீஸ்கரில் நக்சல் தாக்குதலில் 3 சிஆர்பிஎப் வீரர்கள் பலி: 14 வீரர்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : 3 ,CRPF ,Naxal ,Chhattisgarh ,Raipur ,Naxals ,Tekalgudam ,Bijapur district ,Bijapur ,Dinakaran ,
× RELATED மணிப்பூர் சிஆர்பிஎப் முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல்; 2 வீரர்கள் பலி