×

மூணாறு அருகே சிறுமி கூட்டு பலாத்காரம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உள்பட 3 வாலிபர்களுக்கு 90 வருடம் சிறை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ளது பூப்பாறை. இங்கு ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2022 மே 29ம் தேதி மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒரு 16 வயது சிறுமி தன்னுடைய காதலனுடன் அங்குள்ள ஒரு தேயிலைத் தோட்டத்திற்கு சென்றுள்ளார். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த 6 பேர் கொண்ட ஒரு கும்பல், காதலனை அடித்து விரட்டிவிட்டு அந்த சிறுமியை கொடூரமாக பலாத்காரம் செய்தது.

இந்த சம்பவம் குறித்து பூப்பாறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நெல்லையை சேர்ந்த சுகந்த், போடியை சேர்ந்த சிவகுமார் மற்றும் பூப்பாறை பகுதியை சேர்ந்த ஷியாம் உள்பட 6 பேரை கைது செய்தனர். இவர்களில் 2 பேர் சிறுவர்கள் ஆவர். இந்த வழக்கு தேவிகுளம் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுகந்த், சிவகுமார் மற்றும் ஷியாம் ஆகியோருக்கு போக்சோ உள்பட பல்வேறு பிரிவுகளில் 90 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தது. இன்னொருவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

The post மூணாறு அருகே சிறுமி கூட்டு பலாத்காரம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உள்பட 3 வாலிபர்களுக்கு 90 வருடம் சிறை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Munnar ,Thiruvananthapuram ,Pooparai ,Idukki district ,Kerala ,West Bengal ,
× RELATED மூணாறு அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு